அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

பாலதேவகஜன்

எச்சத்து நிலையகற்றி
உச்சத்தில் எமையிருந்த
உலகே மெச்சும்
மாபெரும் விடுதலை போரை
வழிநடத்திய வீரத்தலைவா!
வழிமேல் விழிவைத்து
காத்து கிடக்கின்றோம்
உனது வருகைக்காக.

ஆசைகள் சுரந்த
எச்சத்தில் பிறந்தவனல்ல நீ!
விடுதலை சுரந்திட்ட
வீர மறவனாய் எமக்காக
பிறந்தவனே நீ!
சேர சோழ பாண்டியரின்
பரிணாம்மாய் பிறந்த
பெரும் தலைவனே நீ!

மழைபொழியும் கார்த்திகையில்
பார்வதியின் வயிற்றினிலே
துளிர்த்துவந்த நறுமுகை!
ஈழத்தாய் மண்ணிலே
மொட்டவிழ்ந்த நன்னாள்
நமக்கெல்லாம் பொன்னாள்.

கட்டவிழந்த காட்டாற்று
வெள்ளம் போல்
வற்றாத நின் புகழ்
வையகமுள்ளவரை வாழ்க.
வீரப்போர் புரிந்த
ஈழ மறவா!
புதுவிடியல் புலரும்
ஒரு பொன்நாளில்
நாவெல்லாம் நின்
மாண்பு பேச
காலமும் கர்வங்கொள்ள
கரிகாலா! நீ வாழ்க.

அறத்தின் வழி நின்று
இனத்தின் துயர்துடைக்கும்
விடுதலை போராட்டத்தை
சோரம் போகாமலும்
பேரம் பேசாமலும்
உறுதியோடு வழிநடத்திய
உன்னத தலைவா நீ! வாழ்க.

ஈழம் என்ற ஒரே இலக்கில்
இறுதிவரை களத்தில் நின்று
களமாடிய எங்கள் கரிகாலா!
சொல் அல்ல செயலெனும்
எங்கள் செயல்வீரா!
கரைக்குள் அடங்கா
கடலாய் விரியும்
நின் தீரம்! சொல்லி
அந்தமில்லா தமிழில்
புகழ்பாடி போற்றுகின்ற
தலைவா நீ! வாழ்க.

Nada Mohan
Author: Nada Mohan