அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

புதிய தலைமுறை

ராணி சம்பந்தர்

பலமுறை கண்ட தலைமுறையோ
வரைமுறையின்றி விரைந்தோடும்
புதிய நடைமுறையில் நிலைகுலைய
வீதி நடுவே சிலையானது கேவலம்

அதிக எதிர்பார்ப்பும் மோதும் சவாலும்
குதர்க்கமான விவாதக் குழப்பமோடும்
அமர்ந்தபடி பணந்தேடும் புழுகுமூட்டையும்
கறைபடியும் வாழ்வின் முறையற்ற அவலம்

எந்தப் பாதை போவது சரியாகத் தெரியாது
அந்தப் போதையில் மன அழுத்தம் புரியாது
அறிவுரையோ ஆலோசனையோ கேளாது
தறிகெட்ட மனிதர் தம் வலிமை அறியாது
முடங்கியது துரதிர்ஷ்டம் பெரும் பேரவலம் .

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading