நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

புதிய தலைமுறை

ராணி சம்பந்தர்

பலமுறை கண்ட தலைமுறையோ
வரைமுறையின்றி விரைந்தோடும்
புதிய நடைமுறையில் நிலைகுலைய
வீதி நடுவே சிலையானது கேவலம்

அதிக எதிர்பார்ப்பும் மோதும் சவாலும்
குதர்க்கமான விவாதக் குழப்பமோடும்
அமர்ந்தபடி பணந்தேடும் புழுகுமூட்டையும்
கறைபடியும் வாழ்வின் முறையற்ற அவலம்

எந்தப் பாதை போவது சரியாகத் தெரியாது
அந்தப் போதையில் மன அழுத்தம் புரியாது
அறிவுரையோ ஆலோசனையோ கேளாது
தறிகெட்ட மனிதர் தம் வலிமை அறியாது
முடங்கியது துரதிர்ஷ்டம் பெரும் பேரவலம் .

Nada Mohan
Author: Nada Mohan