” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புதிய தலைமுறை

ராணி சம்பந்தர்

பலமுறை கண்ட தலைமுறையோ
வரைமுறையின்றி விரைந்தோடும்
புதிய நடைமுறையில் நிலைகுலைய
வீதி நடுவே சிலையானது கேவலம்

அதிக எதிர்பார்ப்பும் மோதும் சவாலும்
குதர்க்கமான விவாதக் குழப்பமோடும்
அமர்ந்தபடி பணந்தேடும் புழுகுமூட்டையும்
கறைபடியும் வாழ்வின் முறையற்ற அவலம்

எந்தப் பாதை போவது சரியாகத் தெரியாது
அந்தப் போதையில் மன அழுத்தம் புரியாது
அறிவுரையோ ஆலோசனையோ கேளாது
தறிகெட்ட மனிதர் தம் வலிமை அறியாது
முடங்கியது துரதிர்ஷ்டம் பெரும் பேரவலம் .

Nada Mohan
Author: Nada Mohan