புதிய தலைமுறை

ராணி சம்பந்தர்

பலமுறை கண்ட தலைமுறையோ
வரைமுறையின்றி விரைந்தோடும்
புதிய நடைமுறையில் நிலைகுலைய
வீதி நடுவே சிலையானது கேவலம்

அதிக எதிர்பார்ப்பும் மோதும் சவாலும்
குதர்க்கமான விவாதக் குழப்பமோடும்
அமர்ந்தபடி பணந்தேடும் புழுகுமூட்டையும்
கறைபடியும் வாழ்வின் முறையற்ற அவலம்

எந்தப் பாதை போவது சரியாகத் தெரியாது
அந்தப் போதையில் மன அழுத்தம் புரியாது
அறிவுரையோ ஆலோசனையோ கேளாது
தறிகெட்ட மனிதர் தம் வலிமை அறியாது
முடங்கியது துரதிர்ஷ்டம் பெரும் பேரவலம் .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading