புதிர்

கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்

சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்
சொல்லவிடாது விடையை
குழப்பியே சாதிக்கும்

முடிச்சுக்களாய் நின்று
மனதினைத் தட்டும்
வரிக்குள்ளே ஆயிரம்
அர்த்தங்களும் சொட்டும்

தெரிந்தது போலிருக்கும்
தெரியாதது அதுவாகும்
புரிந்தது போலிருக்கும்
புரியாததாய் புதிராகும்

விடை சரியென்றாலே
புன்னகையும் மலர்கின்றது
அதைப் பெருமையுடன்
சொல்லியே மகிழ்கின்றது

ஜெயம்
14-01-2026

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading