” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

புதிர்

ராணி சம்பந்தர்

புதிருக்குள் புதிர் போட்டாலே
அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை
கேட்டதும் போட்டானே ஒரு போடு
பிடிபட்டானே உதிர்ந்த தங்கப்பன்

தொடுத்த வினா உங்கப்பன் எங்கே?
வீட்டில் இல்லை எனும் பதில் வராது
சொன்ன விதமோ அதிர்வில் அதிர
கடனை அடைக்கவே முடியாமலேயே
குதிருக்குள் ஒளிர்ந்திருந்த பொய்யே
பொட்டென உடைத்திடுமே

அறிவுத்திறனில் புதிர் பூத்திருக்கும்
விடுகதை தொடுத்து காத்திருக்கும்
சிந்தனையில் சிதைந்த உருவமோ
போர்த்திருக்க தேடித்தேடிய புதுமை
வதைக்க புரிந்தும் புரியா அறிந்தும்
அறியாது தெரியாத புதிருக்கு பதில்
கிடைத்திடுமே கிடைத்திடுமே .

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading