புதிர்

ராணி சம்பந்தர்

புதிருக்குள் புதிர் போட்டாலே
அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை
கேட்டதும் போட்டானே ஒரு போடு
பிடிபட்டானே உதிர்ந்த தங்கப்பன்

தொடுத்த வினா உங்கப்பன் எங்கே?
வீட்டில் இல்லை எனும் பதில் வராது
சொன்ன விதமோ அதிர்வில் அதிர
கடனை அடைக்கவே முடியாமலேயே
குதிருக்குள் ஒளிர்ந்திருந்த பொய்யே
பொட்டென உடைத்திடுமே

அறிவுத்திறனில் புதிர் பூத்திருக்கும்
விடுகதை தொடுத்து காத்திருக்கும்
சிந்தனையில் சிதைந்த உருவமோ
போர்த்திருக்க தேடித்தேடிய புதுமை
வதைக்க புரிந்தும் புரியா அறிந்தும்
அறியாது தெரியாத புதிருக்கு பதில்
கிடைத்திடுமே கிடைத்திடுமே .

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading