“புன்னகை “

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_212

” புன்னகை”
புன்னகை செல்வன்
பூவரசன் நாவரசன்
நானிலம் பேற்றும்
நற்றமிழ் அரசன்!

தமிழ்ச்செல்வா தாய்நிலம்
உனை வணங்கும்
உன் புன்னகை இன்னும் மங்கவில்லை பொங்குகின்றது
உன் கனிவான பேச்சு காதில் கேட்கின்றது!

வான்படை செய்த சதியால்
புன்னகை செல்வனை தமிழீழம் இழந்தது
திட்டமிட்ட அரசின் நாசகார சதிக்கி இரையாகிய
பிரிகேடியர் தமிழ்ச்செல்வா உன் புன்னகை இன்னும் பூத்து குலுங்குது!

காய்த்து கனியாக
காத்திருந்தாய் காக்கை வன்னியன் கூட்டம் காட்டி கொடுத்ததே
காலம் காலமாக காக்கை வன்னியன்
கூட்டத்தால்
எம் தாய் நிலம் பறிபோனதே!
நன்றி 🙏

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading