” பூத்துவிட்டாள் காலமகள் “

ரஜனி அன்ரன் (B.A) ” பூத்துவிட்டாள் காலமகள்” 08.01.2026

காலத்தின் சுழற்சிமாற்றம் காலமகளின் கொடை
காலம் தந்தபரிசு புத்தாண்டு
கடந்தகாலத் தவறுகளைத் திருத்தி
முடிந்துபோன பக்கங்களை விலக்கி
முனைப்போடு தொடங்கும் வாழ்வினை
முத்தாப்பாய் நகர்த்த மலர்ந்து விட்டாள் காலமகள் !

பூக்கள் மட்டுமல்ல பூத்துவிட்டாள் காலமகளும்
பாக்கள் எங்கும் இசைக்கட்டும்
புதியதொடக்கம் மெளனமாய் பிறக்கட்டும்
மனங்கள் சிறக்கட்டும் மனிதநேயமும் மலரட்டும் !

புன்னகை மணம்வீச புத்தூக்கம் சிறக்க
கன்னல் மொழியாளும் கதைகூற
மின்னல் வேகமாய் எழுச்சிகளும் தொடர
வாழ்க்கையெனும் தோட்டத்தில்
வெற்றிமலர்கள் சிரிக்கட்டும்
புதிய நம்பிக்கை ஒளியில்
பூத்துவிட்டாள் காலமகள்
புலர்ந்து விட்டது வாழ்வும் !

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading