” பூத்துவிட்டாள் காலமகள் “

ரஜனி அன்ரன் (B.A) ” பூத்துவிட்டாள் காலமகள்” 08.01.2026

காலத்தின் சுழற்சிமாற்றம் காலமகளின் கொடை
காலம் தந்தபரிசு புத்தாண்டு
கடந்தகாலத் தவறுகளைத் திருத்தி
முடிந்துபோன பக்கங்களை விலக்கி
முனைப்போடு தொடங்கும் வாழ்வினை
முத்தாப்பாய் நகர்த்த மலர்ந்து விட்டாள் காலமகள் !

பூக்கள் மட்டுமல்ல பூத்துவிட்டாள் காலமகளும்
பாக்கள் எங்கும் இசைக்கட்டும்
புதியதொடக்கம் மெளனமாய் பிறக்கட்டும்
மனங்கள் சிறக்கட்டும் மனிதநேயமும் மலரட்டும் !

புன்னகை மணம்வீச புத்தூக்கம் சிறக்க
கன்னல் மொழியாளும் கதைகூற
மின்னல் வேகமாய் எழுச்சிகளும் தொடர
வாழ்க்கையெனும் தோட்டத்தில்
வெற்றிமலர்கள் சிரிக்கட்டும்
புதிய நம்பிக்கை ஒளியில்
பூத்துவிட்டாள் காலமகள்
புலர்ந்து விட்டது வாழ்வும் !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading