மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பேரிடர் 94

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025

பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து உறவுகள் பிரிந்து
விம்மி அலறி விழுந்தடித்தோடி

ஆர்ப்பரிக்கும் கடலும் அதிர்வலையும்
ஆங்காங்கு மலைச்சரிவும்
வானம் உடைந்து மழை கொட்ட,
வனமும் பூமியும் ஆத்திரம் காட்ட

கட்டிய கோபுரம் கழண்டு கொட்டி
கதிர்களெல்லாம் கரைந்து போக
விதி என்று சொல்லி விலகிப் போவதா?
வினாக்கள் எழுப்பி விடை தேடுவதா?

நெகிழி குப்பை கடலில் கலந்ததா
இனங்களுக்குள் வந்த மதவெறியா
இயற்கையை அழித்ததால் சீற்றமா??
இயற்கையை நேசித்து இணைந்தே வாழ்வோம்.

Jeba Sri
Author: Jeba Sri

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading