” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பேரிடர் 94

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025

பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து உறவுகள் பிரிந்து
விம்மி அலறி விழுந்தடித்தோடி

ஆர்ப்பரிக்கும் கடலும் அதிர்வலையும்
ஆங்காங்கு மலைச்சரிவும்
வானம் உடைந்து மழை கொட்ட,
வனமும் பூமியும் ஆத்திரம் காட்ட

கட்டிய கோபுரம் கழண்டு கொட்டி
கதிர்களெல்லாம் கரைந்து போக
விதி என்று சொல்லி விலகிப் போவதா?
வினாக்கள் எழுப்பி விடை தேடுவதா?

நெகிழி குப்பை கடலில் கலந்ததா
இனங்களுக்குள் வந்த மதவெறியா
இயற்கையை அழித்ததால் சீற்றமா??
இயற்கையை நேசித்து இணைந்தே வாழ்வோம்.

Jeba Sri
Author: Jeba Sri