தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

பொங்குவாய்

ராணி சம்பந்தர்

பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்

கரும வினை தீரத் துதியிலே
பொங்கி உண்டு வணங்கிய
மாந்தரை வாங்கு வாங்கென
நீண்ட தூரம் நாண்டு கொண்டு
துரத்தித் துரத்தியே நீங்குவாய்

வருடம் முடியுதெனப் போதித்து
மங்கிய புகாரும் தேங்கிய நீர்
வெள்ளமும் அடிக்கிற புயலின்
பெருங் காற்றும் சுழன்றிடவே
மூண்டு மூண்டே தங்குவாய்

இரவு பகல் பயந்து விடியாது
அனங்கியே தூங்காது பசிக்
கொடுமை தாங்காது புசிக்க
எதுவுமின்றிக் குடிக்க நீரின்றி
சமைக்க விறகின்றித் தவிக்க
கலைத்துக் கலைத்து நீயோ
பொங்குவாய் .

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading