பொன்.தர்மா

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம்
இல .518
தலைப்பு
**** அகப்பை. , அகம் + பை****
——++++++—+++++———-
மனிதன் , இதில் ஒன்றை, உருவாக்கி அழகூட்டினான்.
மற்றொன்றை, இறைவன் உருவாக்கி ,உயிர் கொடுத்தான்.

பரிமாற்றம்,பாவனைகள்,பலதுமாய் , நிலை மாற்றம் பலவும் உண்டு.
பகுத்தறிந்து பாவிப்பதில்,சிலரிடையே ,சில மாற்றமும் உண்டு.

( அன்பை) அள்ளிப் பரிமாறி, ஆழ் மனதில் இடம் பிடிகும், இதில் ஒன்று.
கிள்ளிப் பரிமாறக்,குவளையுள்ளே கூத்தடிக்கும், மற்றொன்று.

ஆத்திரம், அவதி கொண்டு, அடிதடி க்கும், தூக்குதலுண்டு.
ஆறாத் துயரினாலே, அகப்பையுமோ, முறிபட்டு மாய்வதுண்டு.

அன்பினை நிறைக்கையிலே, ஆனந்தம் , ஊற்றெடுத்துப் பெருகும்.
பண்பினை , இழக்கையிலே, பாவம் குடி கொள்ளும் கோட்டையாக , உரு மாறும்.
அது……….அக…….பை
அன்புடை உபசரிப்பு, அது , அகப்பை பிடிக்கும் , அழகினிலே தெரியும்.
ஆக்கினை யால் உபசரிப்போ, அகப்பை வைத்துத் , துலாவி எடுக்கையிலே புரியும்.
“”” பொன்.தர்மா””'”

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading