போரிடர்

ராணி சம்பந்தர்

பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?

நூறிடர் வருமெனக் கூறிடர்
எவரோ அவர் சாபந்தானோ
ஊறிடும் கார்த்திகைப் பூவில்
உறிஞ்சிடும் மழை நீர் மோகமா

உதிரம் கரைந்தது கூறிடுமே
கல்லறைப் பூக்களின் மண்
அரிஞ்சிடும் கண்ணீரே என
கார்கால விண்மேகங்களே
மானிடரில் ஏனிந்த மோகம்

ஒவ்வோர் வருடப் புதுப் பெயர்
இவ்வருடத் திட்வாவோ தீவிரம்
ஊரெல்லாம் அல்லோலம்
வேரறுந்த மரம் அலங்கோலம்

இடைமுறிந்த வாழை ஊர்கோலம்
மண் சரிந்த புதைகுழி பலிகோலம்
இன்றும் துரத்தும் இயற்கைப் பசியே
இன்னுமின்னும் தீரவில்லையா
உன் தாகம் .

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading