போரிடர்

ராணி சம்பந்தர்

பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?

நூறிடர் வருமெனக் கூறிடர்
எவரோ அவர் சாபந்தானோ
ஊறிடும் கார்த்திகைப் பூவில்
உறிஞ்சிடும் மழை நீர் மோகமா

உதிரம் கரைந்தது கூறிடுமே
கல்லறைப் பூக்களின் மண்
அரிஞ்சிடும் கண்ணீரே என
கார்கால விண்மேகங்களே
மானிடரில் ஏனிந்த மோகம்

ஒவ்வோர் வருடப் புதுப் பெயர்
இவ்வருடத் திட்வாவோ தீவிரம்
ஊரெல்லாம் அல்லோலம்
வேரறுந்த மரம் அலங்கோலம்

இடைமுறிந்த வாழை ஊர்கோலம்
மண் சரிந்த புதைகுழி பலிகோலம்
இன்றும் துரத்தும் இயற்கைப் பசியே
இன்னுமின்னும் தீரவில்லையா
உன் தாகம் .

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading