தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

போர்க்கோலம்-78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025

இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…

சேவல் கூவும் காலையும்
சீராக வீசும் சில்லென்ற காற்றும்
பச்சைப் பசேலென நெல்வயலும்
பசுதரு சுடு பாலும்

பரந்து நிறைந்த மனமும்
பண்ணிசையோடு ஆலயமணியும்
பட்டாம்பூச்சியான வாழ்வு
பறித்தெறிந்தது போர்க்காலம்

சாம்பல் தெருக்களாய்.
சகதி வாழ்க்கையாய்
உயிர்க்கொலையும் உடமையிழந்து
உலகெங்கும் சிதறல்களாய்

சிக்கி முக்கி சின்னாபின்னமாகி
சுதந்திரமில்லா சுதந்திரதினமும்
மழலைக்காய் எதிர்காலம் மலரட்டும்
மௌனமாகி போர்க்காலம் மறையட்டும்.

Jeba Sri
Author: Jeba Sri

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading