போர்க்கோலம்-78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025

இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…

சேவல் கூவும் காலையும்
சீராக வீசும் சில்லென்ற காற்றும்
பச்சைப் பசேலென நெல்வயலும்
பசுதரு சுடு பாலும்

பரந்து நிறைந்த மனமும்
பண்ணிசையோடு ஆலயமணியும்
பட்டாம்பூச்சியான வாழ்வு
பறித்தெறிந்தது போர்க்காலம்

சாம்பல் தெருக்களாய்.
சகதி வாழ்க்கையாய்
உயிர்க்கொலையும் உடமையிழந்து
உலகெங்கும் சிதறல்களாய்

சிக்கி முக்கி சின்னாபின்னமாகி
சுதந்திரமில்லா சுதந்திரதினமும்
மழலைக்காய் எதிர்காலம் மலரட்டும்
மௌனமாகி போர்க்காலம் மறையட்டும்.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading