10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
போர்க்கோலம்-78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல் கூவும் காலையும்
சீராக வீசும் சில்லென்ற காற்றும்
பச்சைப் பசேலென நெல்வயலும்
பசுதரு சுடு பாலும்
பரந்து நிறைந்த மனமும்
பண்ணிசையோடு ஆலயமணியும்
பட்டாம்பூச்சியான வாழ்வு
பறித்தெறிந்தது போர்க்காலம்
சாம்பல் தெருக்களாய்.
சகதி வாழ்க்கையாய்
உயிர்க்கொலையும் உடமையிழந்து
உலகெங்கும் சிதறல்களாய்
சிக்கி முக்கி சின்னாபின்னமாகி
சுதந்திரமில்லா சுதந்திரதினமும்
மழலைக்காய் எதிர்காலம் மலரட்டும்
மௌனமாகி போர்க்காலம் மறையட்டும்.

Author: Jeba Sri
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...