சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

போர்க்கோலம்-78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025

இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…

சேவல் கூவும் காலையும்
சீராக வீசும் சில்லென்ற காற்றும்
பச்சைப் பசேலென நெல்வயலும்
பசுதரு சுடு பாலும்

பரந்து நிறைந்த மனமும்
பண்ணிசையோடு ஆலயமணியும்
பட்டாம்பூச்சியான வாழ்வு
பறித்தெறிந்தது போர்க்காலம்

சாம்பல் தெருக்களாய்.
சகதி வாழ்க்கையாய்
உயிர்க்கொலையும் உடமையிழந்து
உலகெங்கும் சிதறல்களாய்

சிக்கி முக்கி சின்னாபின்னமாகி
சுதந்திரமில்லா சுதந்திரதினமும்
மழலைக்காய் எதிர்காலம் மலரட்டும்
மௌனமாகி போர்க்காலம் மறையட்டும்.

Jeba Sri
Author: Jeba Sri