தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி

ஜெயம் தங்கராஜா

கவி 757

மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி

சிரிக்கும்போதெல்லாம் மரணம் ஒத்திப் போடப்படுகின்றது
புரிந்தோரின் வாழ்க்கை மகிழ்ச்சியால் சூழப்படுகின்றது
அறிவுக்கு ஆதாரமே குறையாத முகமலர்ச்சி
அறிந்துகொண்டால் அவருக்கு வந்திடுமோ தளர்ச்சி

இந்தவுடல் வயதாக தோல் சுருங்கும்
சந்தோசத்தை விட்டால் வாழ்வே சுருங்கும்
விலைக்கு வாங்க முடியாது மகிழ்ச்சி
விளைந்துவிட்டால் வாழ்வே கொண்டாட்ட நிகழ்ச்சி

கடினமான சூழ்நிலையை இதுவன்றோ அகற்றும்
துடிப்பாக செயற்படவே மனதிற்கு புகட்டும்
நகைச்சுவை உணர்விருந்தால் வாழ்விலேது இறுக்கம்
பகையேது உறவுக்குள்ளே அன்றாடம் சிறக்கும்

எண்ணங்களின் வண்ணங்களிலே மகிழ்ச்சியின் உற்பத்தி
உண்டாக்கியே உவகையை வாழலாமே நமைச்சுற்றி
இந்த கணம் என்பதுங்கூட மகிழ்ச்சிக்காக
சிந்திப்போம் நேர்மறையாய் மகிழ்ச்சியும் பூக்க

ஜெயம்
22-01-2024

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading