” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 296
18/02/2025 செவ்வாய்
“முகமூடி”
—————
முகமே, அகமதன் கண்ணாடி
மூடி மறைப்பது சரியாமோ!
இகத்தில் இப்படி பலகோடி
இருப்பதை நீயும் அறிவாயோ!

நல்லவர் தாமென முகம் மூடி
நாடெனும் அரங்கு தனிலேறி
அல்லவை செய்யும் ஒருபோது
அகத்திரை கிழியும் அப்போது!

நன்மையும் செய்யுமா முகமூடி
நலமதும் தருமா உனைத்தேடி!
வன்மை செய்வோர் சிலர் கூடி
வரமாய் கொள்வதுஅதை நாடி!

சுயத்தை மறைக்கும் முகமூடி
சுகம் காண்பவன் ஒரு பேடி!
பயத்தை ஊட்டிடும் முகமூடி
பாரில் அழித்திடு இதை தேடி!

வாயை, மூக்கை மறைத்து
வாழ வைத்தது ஓர் கவசம்!
பேய் உயிர்க்கொல்லி அழிந்து
போக வைத்தது முக கவசம்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading