மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 180
28/06/2022 செவ்வாய்
“பிரிவுத் துயர்”
——————
வானொலிக்கு அமைந்த குரலொன்று
வாழாமல் போனதே ஒருபொழுதில்!
காணொலியில் காணும் முகமொன்று
காணாமல் போனதே கணப்பொழுதில்!

வான்வரை தினம் சென்று மீளும்
வண்ணமிகு இன் குரல் ஒன்று
ஏனிங்கு அது மீளவில்லை நன்று
எங்கு செனறு மறைந்தது அன்று!

கோசல்யா சொர்ண லிங்கமென
கோமகளாய் உலவி நின்ற தொன்று
ஈசல்போல் தன் இரு சிறகிழந்து
ஈசனிடம் செல்ல விழைந்ததே அன்று!

பழகிய பாங்கான குரல் ஒன்றை
பாமுகம் இழந்து பரிதவிக் கிறதே
இறுகிய மனத்துடன் நாமும் இன்று
இருகரம் கூப்புகிறோம்: சாந்தி! சாந்தி!!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading