மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மனிதமாய் எழு

வசந்தா ஜெகதீசன்
மனிதமாய் எழு
மாசற்ற உலகின் தூய்மை துலங்குமா
மனிதம் வாழும் புவியாய் பூக்குமா
எங்கும் சகதி நிறைந்த பாதை
எதிலும் தூய்மை விலகிய வாழ்க்கை
ஏக்கம் நிறைந்த விழிகளின் பார்வை
எங்கே தொலைத்தோம் நிம்மதி
நிஜத்தை
முட்களாய் தைக்குதே முரண்பாடுகள் பலது
செயலும் வாழ்வும் சீரற்று சிதைய
காணொளிக் காட்சிகள் கதைகளைக் காவ
புலப்படும் நிஜங்கள் உண்மையா உராய்வா
உலகே இன்று போரின் வதையில்
உலுக்கும் செய்திகள் சமூகவலையில்
மனிதம் வாழ நேயம் தேவை
ஒற்றுமை ஒங்கின் உலகே மேன்மை
மனிதமாய் எழுவோம் மாண்பில் உயர்வோம்
இனமாய் ஒன்றி இலக்கில் வெல்வோம்
மனிதம் வாழ மறுவழி சமைப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading