அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மனிதமாய் எழு

வசந்தா ஜெகதீசன்
மனிதமாய் எழு
மாசற்ற உலகின் தூய்மை துலங்குமா
மனிதம் வாழும் புவியாய் பூக்குமா
எங்கும் சகதி நிறைந்த பாதை
எதிலும் தூய்மை விலகிய வாழ்க்கை
ஏக்கம் நிறைந்த விழிகளின் பார்வை
எங்கே தொலைத்தோம் நிம்மதி
நிஜத்தை
முட்களாய் தைக்குதே முரண்பாடுகள் பலது
செயலும் வாழ்வும் சீரற்று சிதைய
காணொளிக் காட்சிகள் கதைகளைக் காவ
புலப்படும் நிஜங்கள் உண்மையா உராய்வா
உலகே இன்று போரின் வதையில்
உலுக்கும் செய்திகள் சமூகவலையில்
மனிதம் வாழ நேயம் தேவை
ஒற்றுமை ஒங்கின் உலகே மேன்மை
மனிதமாய் எழுவோம் மாண்பில் உயர்வோம்
இனமாய் ஒன்றி இலக்கில் வெல்வோம்
மனிதம் வாழ மறுவழி சமைப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading