நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மனிதமாய் எழு

வசந்தா ஜெகதீசன்
மனிதமாய் எழு
மாசற்ற உலகின் தூய்மை துலங்குமா
மனிதம் வாழும் புவியாய் பூக்குமா
எங்கும் சகதி நிறைந்த பாதை
எதிலும் தூய்மை விலகிய வாழ்க்கை
ஏக்கம் நிறைந்த விழிகளின் பார்வை
எங்கே தொலைத்தோம் நிம்மதி
நிஜத்தை
முட்களாய் தைக்குதே முரண்பாடுகள் பலது
செயலும் வாழ்வும் சீரற்று சிதைய
காணொளிக் காட்சிகள் கதைகளைக் காவ
புலப்படும் நிஜங்கள் உண்மையா உராய்வா
உலகே இன்று போரின் வதையில்
உலுக்கும் செய்திகள் சமூகவலையில்
மனிதம் வாழ நேயம் தேவை
ஒற்றுமை ஒங்கின் உலகே மேன்மை
மனிதமாய் எழுவோம் மாண்பில் உயர்வோம்
இனமாய் ஒன்றி இலக்கில் வெல்வோம்
மனிதம் வாழ மறுவழி சமைப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan