மனித நேயம்

வியாழன் கவிதை நேரம்..
கவி இலக்கம்-2172

மனித நேயம்..
ஆறறிவின் உயிர்ப்பினில்
அகத்தில் நிறை காவியம்
அன்னை ஊட்டிய தாய்ப்பால்
அள்ளித்தந்த உணர்வோவியம்
எத்திசை வாழ்ந்த போதும்
எங்கே அழுகை ஒலி கேட்பின்
அக்கணம் விரல் நீளும் -பின்
துயர் ஆற்றும் ஈரம் இதுவாமே..

பிறப்பவர் இறப்பது இயல்பென
இருப்பை உணர்த்தும் காலம்
இறப்பவர் முன்னே காண்கிலே
இரக்கமும் கொள்வது ஏனோ
உதிரம் மண்ணில் சிந்திடவும்
உயிரே அதற்கு விதை ஆயினும்
புன்னகை சூடியே போகையில்
கரையுதே மனித நேயம்..

எத்தனை உன்னதர் தோன்றினர்
உலகுக்கு உயர்வைக் காட்டினர்
கலங்கும் உளத்தின் கலவரத்தை
கனிந்த செயலால் மாற்றினர்
பேதமை இன்றியே தடத்தை
மற்றவர் வாழ்ந்திட பதித்தனர்..
சிவதர்சனி இராகவன்
25/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading