தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

மனித நேயம்

வியாழன் கவிதை நேரம்..
கவி இலக்கம்-2172

மனித நேயம்..
ஆறறிவின் உயிர்ப்பினில்
அகத்தில் நிறை காவியம்
அன்னை ஊட்டிய தாய்ப்பால்
அள்ளித்தந்த உணர்வோவியம்
எத்திசை வாழ்ந்த போதும்
எங்கே அழுகை ஒலி கேட்பின்
அக்கணம் விரல் நீளும் -பின்
துயர் ஆற்றும் ஈரம் இதுவாமே..

பிறப்பவர் இறப்பது இயல்பென
இருப்பை உணர்த்தும் காலம்
இறப்பவர் முன்னே காண்கிலே
இரக்கமும் கொள்வது ஏனோ
உதிரம் மண்ணில் சிந்திடவும்
உயிரே அதற்கு விதை ஆயினும்
புன்னகை சூடியே போகையில்
கரையுதே மனித நேயம்..

எத்தனை உன்னதர் தோன்றினர்
உலகுக்கு உயர்வைக் காட்டினர்
கலங்கும் உளத்தின் கலவரத்தை
கனிந்த செயலால் மாற்றினர்
பேதமை இன்றியே தடத்தை
மற்றவர் வாழ்ந்திட பதித்தனர்..
சிவதர்சனி இராகவன்
25/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading