கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

மனித நேயம்

வியாழன் கவிதை நேரம்..
கவி இலக்கம்-2172

மனித நேயம்..
ஆறறிவின் உயிர்ப்பினில்
அகத்தில் நிறை காவியம்
அன்னை ஊட்டிய தாய்ப்பால்
அள்ளித்தந்த உணர்வோவியம்
எத்திசை வாழ்ந்த போதும்
எங்கே அழுகை ஒலி கேட்பின்
அக்கணம் விரல் நீளும் -பின்
துயர் ஆற்றும் ஈரம் இதுவாமே..

பிறப்பவர் இறப்பது இயல்பென
இருப்பை உணர்த்தும் காலம்
இறப்பவர் முன்னே காண்கிலே
இரக்கமும் கொள்வது ஏனோ
உதிரம் மண்ணில் சிந்திடவும்
உயிரே அதற்கு விதை ஆயினும்
புன்னகை சூடியே போகையில்
கரையுதே மனித நேயம்..

எத்தனை உன்னதர் தோன்றினர்
உலகுக்கு உயர்வைக் காட்டினர்
கலங்கும் உளத்தின் கலவரத்தை
கனிந்த செயலால் மாற்றினர்
பேதமை இன்றியே தடத்தை
மற்றவர் வாழ்ந்திட பதித்தனர்..
சிவதர்சனி இராகவன்
25/6/2025

Nada Mohan
Author: Nada Mohan