இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மனித நேயம்

வியாழன் கவிதை நேரம்..
கவி இலக்கம்-2172

மனித நேயம்..
ஆறறிவின் உயிர்ப்பினில்
அகத்தில் நிறை காவியம்
அன்னை ஊட்டிய தாய்ப்பால்
அள்ளித்தந்த உணர்வோவியம்
எத்திசை வாழ்ந்த போதும்
எங்கே அழுகை ஒலி கேட்பின்
அக்கணம் விரல் நீளும் -பின்
துயர் ஆற்றும் ஈரம் இதுவாமே..

பிறப்பவர் இறப்பது இயல்பென
இருப்பை உணர்த்தும் காலம்
இறப்பவர் முன்னே காண்கிலே
இரக்கமும் கொள்வது ஏனோ
உதிரம் மண்ணில் சிந்திடவும்
உயிரே அதற்கு விதை ஆயினும்
புன்னகை சூடியே போகையில்
கரையுதே மனித நேயம்..

எத்தனை உன்னதர் தோன்றினர்
உலகுக்கு உயர்வைக் காட்டினர்
கலங்கும் உளத்தின் கலவரத்தை
கனிந்த செயலால் மாற்றினர்
பேதமை இன்றியே தடத்தை
மற்றவர் வாழ்ந்திட பதித்தனர்..
சிவதர்சனி இராகவன்
25/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading