அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

மாதவமே உந்தனை……..

இரா.விஜயகௌரி

மாதவமே உந்தனை மறக்கலாகுமோ
எங்கள் மாவீர மணிகளை நாம்
விலக்கலாகுமோ. விலகல் ஆகுமோ
செய்நன்றி. கொன்றாராய் மாறிடலாமோ

வித்துடலை தான் விதைத்து- தினம்
விடுதலையின் மூச்சிழைத்து பெற்றவளை
தான் விடுத்து ஆகுதியின் தீக்கங்காய்
உனை இறுத்து சென்றவன்நீ

காலங்கள்மறைகிறது கனதியது தொடர்கதைதான்
எண்ணக் கருக்களிலே தமிழ்தாயை சுமந்து நிதம்
கடந்த இடம் போர்ப்பறைகள்
கசிந்ததுவோ குருதி வழி

நீரலைக்குள் நினைவெழுதி
உயிர்வதைக்குள் உழல்வோரின்
கனவுகட்கு விதை விதைத்து-நம்
வருடி எழும்கரங்களினால் வணங்கிடுவோம்

மாதவமே மணிவிளக்கே உன்
தியாகத்தின் பொருள் உணர்ந்தோம்
திடச்சுவடுகளின் பெருவலி மதித்தோம்
மண்மீட்பின் சுவடுகளில் நினைவெழுதி உறவிழைவோம்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading