மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதவமே உந்தனை……..

இரா.விஜயகௌரி

மாதவமே உந்தனை மறக்கலாகுமோ
எங்கள் மாவீர மணிகளை நாம்
விலக்கலாகுமோ. விலகல் ஆகுமோ
செய்நன்றி. கொன்றாராய் மாறிடலாமோ

வித்துடலை தான் விதைத்து- தினம்
விடுதலையின் மூச்சிழைத்து பெற்றவளை
தான் விடுத்து ஆகுதியின் தீக்கங்காய்
உனை இறுத்து சென்றவன்நீ

காலங்கள்மறைகிறது கனதியது தொடர்கதைதான்
எண்ணக் கருக்களிலே தமிழ்தாயை சுமந்து நிதம்
கடந்த இடம் போர்ப்பறைகள்
கசிந்ததுவோ குருதி வழி

நீரலைக்குள் நினைவெழுதி
உயிர்வதைக்குள் உழல்வோரின்
கனவுகட்கு விதை விதைத்து-நம்
வருடி எழும்கரங்களினால் வணங்கிடுவோம்

மாதவமே மணிவிளக்கே உன்
தியாகத்தின் பொருள் உணர்ந்தோம்
திடச்சுவடுகளின் பெருவலி மதித்தோம்
மண்மீட்பின் சுவடுகளில் நினைவெழுதி உறவிழைவோம்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading