29
Jul
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
29
Jul
நட்பென்றாலே
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
மாதவமே உந்தனை……..
இரா.விஜயகௌரி
மாதவமே உந்தனை மறக்கலாகுமோ
எங்கள் மாவீர மணிகளை நாம்
விலக்கலாகுமோ. விலகல் ஆகுமோ
செய்நன்றி. கொன்றாராய் மாறிடலாமோ
வித்துடலை தான் விதைத்து- தினம்
விடுதலையின் மூச்சிழைத்து பெற்றவளை
தான் விடுத்து ஆகுதியின் தீக்கங்காய்
உனை இறுத்து சென்றவன்நீ
காலங்கள்மறைகிறது கனதியது தொடர்கதைதான்
எண்ணக் கருக்களிலே தமிழ்தாயை சுமந்து நிதம்
கடந்த இடம் போர்ப்பறைகள்
கசிந்ததுவோ குருதி வழி
நீரலைக்குள் நினைவெழுதி
உயிர்வதைக்குள் உழல்வோரின்
கனவுகட்கு விதை விதைத்து-நம்
வருடி எழும்கரங்களினால் வணங்கிடுவோம்
மாதவமே மணிவிளக்கே உன்
தியாகத்தின் பொருள் உணர்ந்தோம்
திடச்சுவடுகளின் பெருவலி மதித்தோம்
மண்மீட்பின் சுவடுகளில் நினைவெழுதி உறவிழைவோம்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...