மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

மாதவமே உந்தனை……..

இரா.விஜயகௌரி

மாதவமே உந்தனை மறக்கலாகுமோ
எங்கள் மாவீர மணிகளை நாம்
விலக்கலாகுமோ. விலகல் ஆகுமோ
செய்நன்றி. கொன்றாராய் மாறிடலாமோ

வித்துடலை தான் விதைத்து- தினம்
விடுதலையின் மூச்சிழைத்து பெற்றவளை
தான் விடுத்து ஆகுதியின் தீக்கங்காய்
உனை இறுத்து சென்றவன்நீ

காலங்கள்மறைகிறது கனதியது தொடர்கதைதான்
எண்ணக் கருக்களிலே தமிழ்தாயை சுமந்து நிதம்
கடந்த இடம் போர்ப்பறைகள்
கசிந்ததுவோ குருதி வழி

நீரலைக்குள் நினைவெழுதி
உயிர்வதைக்குள் உழல்வோரின்
கனவுகட்கு விதை விதைத்து-நம்
வருடி எழும்கரங்களினால் வணங்கிடுவோம்

மாதவமே மணிவிளக்கே உன்
தியாகத்தின் பொருள் உணர்ந்தோம்
திடச்சுவடுகளின் பெருவலி மதித்தோம்
மண்மீட்பின் சுவடுகளில் நினைவெழுதி உறவிழைவோம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading