மாற்றத்தின் ஒளியாய்

ராணி சம்பந்தர்

மாற்றத்தின் ஒளியாய்த்
தங்கியே மலர்ந்திடுவாய்
முற்றத்திலே சுற்றமோடு
பொங்கி மகிழ்ந்திடுவாய்

வற்றா ஊற்றாய்ப் புலரும்
சூரியனை வரவேற்றிடவே
சுற்றவரக் கோலமிட்டிட
முக்கல் வைத்துப் பொங்கல்
பானையில் இட்ட பால்

பொங்கி வர சிவப்பு அரிசி,
சர்க்கரை இனிப்பிட முக்கனி,
கரும்பு, மரக்கறி படைத்திட
மாரி காலம் மறைந்து கோடை
உதித்து விவசாயம் செழிக்க

தை பிறந்தால் வழி பிறக்குமே
இதை நம்பியோர் மனமதுவோ
வாழ்வில் அன்பு ,இனிமையில்
கனிந்திட மாற்றத்தின் ஒளியாய்
நல்வழியே என்றும் காட்டிடுவாய் .

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading