தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

மாற்றம் ஒன்றே……

மாற்றம் ஒன்றே……கவி….ரஜனி அன்ரன் (B.A) 06.03.2025

மாற்றமென்பது இயற்கையின் நியதி
நேற்றும் இன்றும் நாளையும் மாற்றம்
காலம் செய்யும் மாயமே மாற்றம்
ஞாலம் மீதில் எத்தனையோ மாற்றம்
மனிதனும் மாறுவான் வாழ்க்கைப் பயணமதில்
மாற்றம் ஒன்றே மாறியபடி
ஏற்றம் காணும் இயல்பு இதுவே !

பட்டை தீட்டிய வைரமாக
பாமுகப் பக்கமும் கண்டது மாற்றம்
படக்கலவைகளும் பட்டொளி வீசிட
புத்தம் புதிதாய் வடிவமைப்பு
அத்தனை நிகழ்வும் மொத்தமாய் மாற்றம்
அதிபரின் தொடுப்பும் அருணின் கைகொடுப்பும்
அழகோவியமாய் காட்சி தருகுது !

வாழ்க்கை நதியின் ஓட்டத்தில்
வருகின்ற மாற்றங்களும் இயல்பே
மாற்றம் ஒன்றே ஏற்றம் காண
மாற்றம் என்பது புதுமையே !

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading