” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மாற்றம் ஒன்றே……

மாற்றம் ஒன்றே……கவி….ரஜனி அன்ரன் (B.A) 06.03.2025

மாற்றமென்பது இயற்கையின் நியதி
நேற்றும் இன்றும் நாளையும் மாற்றம்
காலம் செய்யும் மாயமே மாற்றம்
ஞாலம் மீதில் எத்தனையோ மாற்றம்
மனிதனும் மாறுவான் வாழ்க்கைப் பயணமதில்
மாற்றம் ஒன்றே மாறியபடி
ஏற்றம் காணும் இயல்பு இதுவே !

பட்டை தீட்டிய வைரமாக
பாமுகப் பக்கமும் கண்டது மாற்றம்
படக்கலவைகளும் பட்டொளி வீசிட
புத்தம் புதிதாய் வடிவமைப்பு
அத்தனை நிகழ்வும் மொத்தமாய் மாற்றம்
அதிபரின் தொடுப்பும் அருணின் கைகொடுப்பும்
அழகோவியமாய் காட்சி தருகுது !

வாழ்க்கை நதியின் ஓட்டத்தில்
வருகின்ற மாற்றங்களும் இயல்பே
மாற்றம் ஒன்றே ஏற்றம் காண
மாற்றம் என்பது புதுமையே !