மாவீரர்கள் மரணம் காண்பதில்லை

ஜெயம்

நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர் விழுந்தது உடலால் மட்டுமே
அவர் வீரமோ வரலாற்றை எட்டுமே

எரிமலைக்கு சமமான பூகம்பத் துளியாய்
குறிபார்த்து தாக்குவதில் பாய்கின்ற புலியாய்
உயிரைக்கூட புன்னகையுடன் அர்ப்பணிப்பார்
உயர்ந்த நோக்கத்துடன் உறுதியாய் பயணிப்பார்

சீவனைவிட உயர்ந்தது தேசத்தின் மண்ணென
காவல் தெய்வங்கள் காத்தாரே கண்ணென
நாம் இருக்கிறோம் வேண்டாமே பயமென
தாம் இருந்தாரே இனத்துக்கு தயவென

மலரொன்றும் அங்கே துப்பாக்கி ஏந்தியது
கலங்காது எதிரியை பலமோடு தாக்கியது
தாய்மண்ணை காப்பாதற்காய் தமைக்கொடுக்கும் ஒப்பந்தம்
மாய்ந்தும் மரணிக்கா மாவீரர் சொந்தம்

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading