10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மொழியும் கவியும்
நேவிஸ் பிலிப் கவி இல (384) 23/01/25
“அ”என்ற எழுத்தானாய்
ஆதி பகவானுக்கே உரித்தானாய்
அம்மா என்ற சொல்லெடுத்து
அகிலமே ஆட் கொள்ளும் அன்பானாய்
இறைவனோடு இணைந்த மொழி
இயற்கையோடு இயைந்த மொழி
தெள்ளு தமிழ்அழகுக்கு
ஈடிணை உண்டோ இவ்வுலகில்
அருந்தமிழ் அருவியிலே
அகழ்ந்தெடுத்த முத்தெனவே
தீந்தமிழால் சொல் தொடுத்து
படைக்கின்றேன் கவியொன்று
காலம்தான் கடந்திடினும்
பண்பட்ட பழைய மொழி
புலம் பெயர் தேசமெங்கும்
புதுமையாய் பொலிந்துடுதே
ஆர்வமாய் பயிலுகின்றார்
உரை நடையும் வாசிப்புமாய்
அடுத்த தலை முறைகள் மிடுக்கோடு
வளருதெங்கள் பா முகத்தில்
வந்தனைகள் செய்திடுவோம்
மனதார வாழ்த்திடுவோம்
எட்டுத் திக்கும் பரவியிங்கே
தங்கத் தமிழ் வளர்ந்திடவே
நன்றி வணக்கம்…..

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...