தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மொழியும். கவியும்………

இரா.விஜயகௌரி

மொழியும் உணர்வும் இழைந்து அசைய
மொழிதலின் அழகில் முத்தமிழ் விளைய
இசையும் அசைந்து இயல்புற தெளிய
குழைந்து குழைந்து குலவிடும் குழந்தை

கவினுறு எழிலை கருத்தாய் பின்னி
எண்ணச் சிதறலை எழுத்துருவாக்கி
விசையுறு மொழியாய் விரல்வழி நுழைந்து
இதயச்சுரங்கம் தொட்டெழும் பேரிழை

மொழியே அழகு மொழிதலே அமிழ்து
தீட்டிய வைரம் போலொரு தீந்தமிழ்
அரங்கம் கண்டிடும்ஆளுமைத் தமிழாழ்
சிங்கப் பெண்ணாய். சீறிப்பாய்வாள்

எத்தனை வீரியம்எங்கனம் வித்தகம்
வேழம் அசைந்தே பிளிறிடும் பெருங்குரல்
அட மொழிமகள் பின்னிய அற்புத காவியம்
கட்டியம் கூறிடும் கன்னித்தாரகை மொழிக்குள் கவிதை

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading