அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

மொழியும் கவியும்

சிவருபன் சர்வேஸ்வரி

மொழியும் கவியும்

அமுதமழை பொழியுது அழகாய் பாராய் //
சுவைபடும் சுந்தரத் தமிழே கேளாய் //
கனிதரும் சோலையழகு போன்றே என்றும் //
நறுமணம் வீசிடும் நற்றமிழே உணர்வாய் //
அழகாய் பதமெடு அடுக்காய் தொடுத்திடு //
மலர்வதும் அங்கே கவியும் அழகே //
விலையாய் வருவதும் இல்லையே நன்றாய் //
விதைக்கும் விதையிலே அழகுடன் முளைக்கும் //
பயிரின் செழிப்பைப் பார்த்தே மகிழும்//
கண்களின் ஒளியின் ஊடே காட்சியுமாகும் //
பண்ணுடன் இசைக்கும் நாதம் பாவுதலன்றோ //
மண்ணிலே பிறந்த மனிதத்தின் உணர்ச்சி //
மொழியாலும் கவியாலும் உலகாளும் போதில் //
முத்தமிழாலும் முளங்கிடும் கீதமே எங்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

Continue reading