பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ உருமாறும் புதிய கோலங்கள் “ ……..கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.02.2022

வாழ்வியலின் வண்ணத்தை
வாழுகின்ற வாழ்வினை
புரட்டிப் போட்டது கொரோனா
அமைதி இழந்தது மனங்கள்
ஆற்ற முடியாத் துயரங்கள்
கோலங்கள் மாறி அலங்கோலமானது வாழ்வு !

முடக்கங்களும் கட்டுப்பாடுகளும்
முடக்கிப் போட்டது வாழ்வை
கட்டுக்குள் வரவில்லை கொரோனாவும்
உருமாறுது வைரஸ்சும்
உருவாகுதே புதிய கோலங்களும் !

உருமாறும் வைரஸ் ஒருபக்கம்
உக்ரைனுக்கும் ரஸ்சியாவிற்கும்
உக்கிரபோர் வெடிக்கும் அபாயம் மறுபக்கம்
உலக நாடுகளும் இப்போ பதற்றம்
உக்கிரைனுக்கு உதவ நாடுகள் பலவும் முண்டியடிப்பு !

எல்லைகளில் படைகளும் குவிப்பு
எரிவாயுவிற்கும் எண்ணைக்கும் தட்டுப்பாடு
எளிதில் வந்திடுமோவெனவும் அங்கலாய்ப்பு
ஐரோப்பிய எல்லை நாடுகளும் அச்சத்தில் உறைவு
உருமாறும் புதியகோலங்கள் உருவாக்குமா அமைதியை ?

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading