வசந்தா ஜெகதீசன்

வென்றுயராண்டே விழுதெறி...

வென்றுயராண்டே விழுதெறி….
ஓடி மறையும் ஒற்றை நொடி
உருவாக்கும் ஆண்டின் பெயரைப் பொறி
தினமாய் திகதியாய் திசையெங்கும் ஒளி
திருப்பங்கள் பற்பல பதிகின்ற வழி

தேடலின் வலுவில் திரட்டிடும் ஆற்றல்
தேசமெங்குமே மிளிர்கின்ற கூட்டல்
ஒடும் நதியாய் கலக்குது உலகு
உறைந்துள்ள பொக்கிசம் மாபெரும் அறிவு

மனிதத்தின் சக்தியே மாற்றத்தின் இணையம்
மறுபடி மறுபடி வளர்ச்சியின் இமயம்
தாக்குண்டு தகர்ந்தாலும்
தணியாது வேகம்
தரணியின் வெற்றியை தாங்கின்ற நுட்பம்

மின்னாகி மிளிருமே வேகத்தின் அறிவு
விழுதாகி விளைவதே விண்ணியல் ஆய்வு
எண்ணற்ற ஏறுபடி இசைந்தோடும் ஆண்டே
என்னாளும் உன்வாழ்வு உயர்கின்ற மகுடம்
ஏன் தானோ இறுதியில் இல்லாது விலகும்
எம்வாழ்வும் உன்போல உதிர்கின்ற ஓன்றே
ஏற்றங்கள் இறக்கங்கள் எண்ணற்ற கணக்கே!
நன்றி
விடையனுப்பி வரவேற்கும் கவிதா நிகழ்வே கவிக்களத்திற்கும் அணிதாங்கும் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading