வசந்தா ஜெகதீசன்

உன்னதமே உன்னதமாய்…..
ஈருளி உருண்டோட
ஈகையில் தினம் மலர
பேருவகை மனம் விரும்பும்
பேதமையை கலைந்தெறியும்
வாதமென வலுப்படுமே
வாழ்க்கையென உரமெழுமே
காலமது கைது செய்யும்
காணிக்கை உவகை கொள்ளும்
மனித இனம் மதிப்பாகும்
மாந்தரினம் சிறப்பாகும்
உன்னதத்தின் உன்னதமாய்
உரிமை வெல்லும் இருசுடராய்
உறவெனும் உயிர்ப்பிலே
உலகாளும் மனிதமே
மதிதிறனின் மதிப்பெழுதும்
மனவெழுச்சி எழுகை பெறும்
பெண்ணினமும் ஆணினமும்
பேதமற்ற ஒரினமாய்
உன்னதத்தின் உயிர்நாடி
ஒற்றுமையின் வேரோடி
ஒன்றுபடும் வாழ்வறமே
உன்னதமாய் உயிர்ப்பெழுதும்
மாந்தவினம் மதிப்பாகும்.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading