வசந்தா ஜெகதீசன்

ஆறுமோ ஆவல்…
வீரத்தின் வாழ்வும்
வெற்றிச் செறிவும்
பற்றிப் படர்ந்திட்ட
தமிழின மிடுக்கில்
தளர்ச்சியின் படிவு
தாங்கிட முடியா
வலியின் சுவடுகள்
மீளவும் எழுத்திலும்
படிகளின் பதிவில்
ஆறுமோ ஆவல்

இருநிலைக் கூறாய்
இடைவெளி வாழ்வாய்
தளர்ச்சியில் நம்மினம்
தன்னம்பிக்கை உறுதியில்
ஆறுமோ ஆவல்

வானொலி ஏடு
வளமெனத் தொடங்கி
பாமுக ஆறாய்
பாரினில் பாய்ந்து
பரவசத் தமிழில்
பல்கிப் பெருகிடும்
இளையோர் திறனில்
ஆறுமோ ஆவல்..

வற்றாச் சுரங்கமாய்
வண்டமிழ் அமுதம் செம்மொழிச் செந்தமிழ்
செழுமையில் ஆறுமோ ஆவல்!
நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading