நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஆறுமோ ஆவல்…
வீரத்தின் வாழ்வும்
வெற்றிச் செறிவும்
பற்றிப் படர்ந்திட்ட
தமிழின மிடுக்கில்
தளர்ச்சியின் படிவு
தாங்கிட முடியா
வலியின் சுவடுகள்
மீளவும் எழுத்திலும்
படிகளின் பதிவில்
ஆறுமோ ஆவல்

இருநிலைக் கூறாய்
இடைவெளி வாழ்வாய்
தளர்ச்சியில் நம்மினம்
தன்னம்பிக்கை உறுதியில்
ஆறுமோ ஆவல்

வானொலி ஏடு
வளமெனத் தொடங்கி
பாமுக ஆறாய்
பாரினில் பாய்ந்து
பரவசத் தமிழில்
பல்கிப் பெருகிடும்
இளையோர் திறனில்
ஆறுமோ ஆவல்..

வற்றாச் சுரங்கமாய்
வண்டமிழ் அமுதம் செம்மொழிச் செந்தமிழ்
செழுமையில் ஆறுமோ ஆவல்!
நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading