மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

வண்ண நிலவே வருவாயே

சிவருபன் சர்வேஸ்வரி

வண்ண நிலவே வருவாயே

இருளுக்குள் ஒளியானாய் இசைபாடும் நிலவானாய்//

கடலுக்குள் உன்முகமும் கவினுறு அழகானதே//
நிலவே நீயும் நீங்காத காவியமே//

புலவிவரும் கவிதைக்கு புகழ்விளங்கும் வெண்ணிலாவே//

துள்ளியாடும் மனமும் பள்ளி கொள்ளவருவாய்//

பருவம் வந்தே நீயும் பூத்துநின்றாய் பொழுதில்//

வைகை பெறுமழகும் பெருமையுடன் நிற்கவே//
பசுமை கொண்ட இடமும் உன்னழகில் இயந்தே//

வெறுமையின்றி வானம் நட்சத்திரத்தைக் காட்டவும்//

வெண்புரவி போன்றே முகில்கள் கூட்டம் போடும் //
மயிலும் எழுந்து ஆடும் குயிலும் கூவிப் பாடும்//
மின்மினிகள் கூட ஒளியையேந்தி ஓடும்//

கலக்கம் தெளிய நீயும் கருணையுடன் வாராயோ //
விழித்துப் பார்க்க நீயுமா விரைந்தே ஓடி வாராய்//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading