வண்ண வண்ணப் பூக்கள்…..

ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025

பூமித்தாயின் பூரிப்பில்
பூக்களெல்லாம் வரங்களே
பூமித்தாயை வனப்பாக்கி
பூவையரையும் மகிழ்வாக்குமே
ஆண்டவனுக்கு அர்ப்பணமாக
அர்ச்சனை மலர்களாகி ஆராதிக்குமே
தேனைத் தேடிவரும் தேனீக்கும்
தினம்தினம் திருவிழா இங்கேதான் !

கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்
வண்ண வண்ணப் பூக்கள்
காலையில் மலர்வது அல்லிப்பூ
கருக்கலில் முகிழ்ப்பது மல்லிகைப்பூ
கதிரவன் வரவினில் தாமரைப்பூ
காதலின் சின்னம் ரோஜாப்பூ !

செம்பவள நிறமாம் செம்பருத்தி
செங்காந்தள் மலராம் எம்தேசீயப்பூ
செம்மஞ்சள் வண்ணமாம் செவ்வந்தி
கொத்தான பூவாம் சாமந்தி
கெத்தான அதிசயப்பூவாம் குறிஞ்சி
வாடும் பூவும் சொல்லும்
வாழ்வின் அழகு நிறைவில்தானென்று !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading