” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வண்ண வண்ணப் பூக்கள்…..

ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025

பூமித்தாயின் பூரிப்பில்
பூக்களெல்லாம் வரங்களே
பூமித்தாயை வனப்பாக்கி
பூவையரையும் மகிழ்வாக்குமே
ஆண்டவனுக்கு அர்ப்பணமாக
அர்ச்சனை மலர்களாகி ஆராதிக்குமே
தேனைத் தேடிவரும் தேனீக்கும்
தினம்தினம் திருவிழா இங்கேதான் !

கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்
வண்ண வண்ணப் பூக்கள்
காலையில் மலர்வது அல்லிப்பூ
கருக்கலில் முகிழ்ப்பது மல்லிகைப்பூ
கதிரவன் வரவினில் தாமரைப்பூ
காதலின் சின்னம் ரோஜாப்பூ !

செம்பவள நிறமாம் செம்பருத்தி
செங்காந்தள் மலராம் எம்தேசீயப்பூ
செம்மஞ்சள் வண்ணமாம் செவ்வந்தி
கொத்தான பூவாம் சாமந்தி
கெத்தான அதிசயப்பூவாம் குறிஞ்சி
வாடும் பூவும் சொல்லும்
வாழ்வின் அழகு நிறைவில்தானென்று !