28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின் பூரிப்பில்
பூக்களெல்லாம் வரங்களே
பூமித்தாயை வனப்பாக்கி
பூவையரையும் மகிழ்வாக்குமே
ஆண்டவனுக்கு அர்ப்பணமாக
அர்ச்சனை மலர்களாகி ஆராதிக்குமே
தேனைத் தேடிவரும் தேனீக்கும்
தினம்தினம் திருவிழா இங்கேதான் !
கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்
வண்ண வண்ணப் பூக்கள்
காலையில் மலர்வது அல்லிப்பூ
கருக்கலில் முகிழ்ப்பது மல்லிகைப்பூ
கதிரவன் வரவினில் தாமரைப்பூ
காதலின் சின்னம் ரோஜாப்பூ !
செம்பவள நிறமாம் செம்பருத்தி
செங்காந்தள் மலராம் எம்தேசீயப்பூ
செம்மஞ்சள் வண்ணமாம் செவ்வந்தி
கொத்தான பூவாம் சாமந்தி
கெத்தான அதிசயப்பூவாம் குறிஞ்சி
வாடும் பூவும் சொல்லும்
வாழ்வின் அழகு நிறைவில்தானென்று !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...