வரமானதோ வயோதிபம்..

வசந்தா ஜெகதீசன்

வரமானதோ வயோதிபம்..
வரமான உறவிவர்
வாழ்விற்கு கொடையிவர்
ஆழ்ந்த அறிவிலே
அனுபவப் பகிர்விலே
வருமுன் காத்திடும்
வழிவகை செப்புவார்

காப்பரண் போன்றவர்
கண்ணியம் செப்புவார்
உறவுகள் மதிப்பினை
உண்மை வாழ்வினை
அறிவுரைப் பகிர்வினை
அன்பின் செறிவினை
அறத்தின் வலுவினை
ஆழமாய் உரைப்பவர்
ஆய்ந்தே கணிப்பவர்
மூத்தோர் எங்கள்
முதுசத்தின் சொத்து
வாழ்வின் வரமாய்
கிட்டிய முத்து
பேறெனக் கொள்வோம்
பெருமையில் மகிழ்வோம்
மதித்தே வாழ்வோம்
மாண்பில் நிறைவோம்.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading