வரமானதோ வயோதிபம்..

வசந்தா ஜெகதீசன்

வரமானதோ வயோதிபம்..
வரமான உறவிவர்
வாழ்விற்கு கொடையிவர்
ஆழ்ந்த அறிவிலே
அனுபவப் பகிர்விலே
வருமுன் காத்திடும்
வழிவகை செப்புவார்

காப்பரண் போன்றவர்
கண்ணியம் செப்புவார்
உறவுகள் மதிப்பினை
உண்மை வாழ்வினை
அறிவுரைப் பகிர்வினை
அன்பின் செறிவினை
அறத்தின் வலுவினை
ஆழமாய் உரைப்பவர்
ஆய்ந்தே கணிப்பவர்
மூத்தோர் எங்கள்
முதுசத்தின் சொத்து
வாழ்வின் வரமாய்
கிட்டிய முத்து
பேறெனக் கொள்வோம்
பெருமையில் மகிழ்வோம்
மதித்தே வாழ்வோம்
மாண்பில் நிறைவோம்.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading