அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

வர்ண் வர்ணப் பூக்கள்..

வியாழன் கவிதை நேரத்துக்காக…!
கவி இலக்கம் – 2175
வர்ண வர்ணப் பூக்கள்..

வாசம் தினம் வீசும்
வர்ண முகம் காட்டும்
கர்ணன் போலும் குணம்
காலை மலரும் இனம்
சினம் தவிர்க்கும் பூக்கள்
சிந்தை கவரும் பாக்கள்
வர்ணம் எத்தனை உண்டோ
அத்தனை வடிவம் தாங்கும்..

கதிரவன் ஒளி பட்டு
கண்கள் மெல்ல திறக்கும்
சிரிக்கும் இதழ் விரித்து
சிகரம் தொடும் அழகும்
மகரந்த மணிகள் சுமக்கும்
மலர்ந்த முகம் கவரும்
இறைவன் ஏற்கும் பூக்கள்
இறவா அழகு கூட்டும்…
சிவதர்சனி இராகவன்
3/7/2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading