இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வர்ண் வர்ணப் பூக்கள்..

வியாழன் கவிதை நேரத்துக்காக…!
கவி இலக்கம் – 2175
வர்ண வர்ணப் பூக்கள்..

வாசம் தினம் வீசும்
வர்ண முகம் காட்டும்
கர்ணன் போலும் குணம்
காலை மலரும் இனம்
சினம் தவிர்க்கும் பூக்கள்
சிந்தை கவரும் பாக்கள்
வர்ணம் எத்தனை உண்டோ
அத்தனை வடிவம் தாங்கும்..

கதிரவன் ஒளி பட்டு
கண்கள் மெல்ல திறக்கும்
சிரிக்கும் இதழ் விரித்து
சிகரம் தொடும் அழகும்
மகரந்த மணிகள் சுமக்கும்
மலர்ந்த முகம் கவரும்
இறைவன் ஏற்கும் பூக்கள்
இறவா அழகு கூட்டும்…
சிவதர்சனி இராகவன்
3/7/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading