நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

வர்ண் வர்ணப் பூக்கள்..

வியாழன் கவிதை நேரத்துக்காக…!
கவி இலக்கம் – 2175
வர்ண வர்ணப் பூக்கள்..

வாசம் தினம் வீசும்
வர்ண முகம் காட்டும்
கர்ணன் போலும் குணம்
காலை மலரும் இனம்
சினம் தவிர்க்கும் பூக்கள்
சிந்தை கவரும் பாக்கள்
வர்ணம் எத்தனை உண்டோ
அத்தனை வடிவம் தாங்கும்..

கதிரவன் ஒளி பட்டு
கண்கள் மெல்ல திறக்கும்
சிரிக்கும் இதழ் விரித்து
சிகரம் தொடும் அழகும்
மகரந்த மணிகள் சுமக்கும்
மலர்ந்த முகம் கவரும்
இறைவன் ஏற்கும் பூக்கள்
இறவா அழகு கூட்டும்…
சிவதர்சனி இராகவன்
3/7/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading