” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வர்ண் வர்ணப் பூக்கள்..

வியாழன் கவிதை நேரத்துக்காக…!
கவி இலக்கம் – 2175
வர்ண வர்ணப் பூக்கள்..

வாசம் தினம் வீசும்
வர்ண முகம் காட்டும்
கர்ணன் போலும் குணம்
காலை மலரும் இனம்
சினம் தவிர்க்கும் பூக்கள்
சிந்தை கவரும் பாக்கள்
வர்ணம் எத்தனை உண்டோ
அத்தனை வடிவம் தாங்கும்..

கதிரவன் ஒளி பட்டு
கண்கள் மெல்ல திறக்கும்
சிரிக்கும் இதழ் விரித்து
சிகரம் தொடும் அழகும்
மகரந்த மணிகள் சுமக்கும்
மலர்ந்த முகம் கவரும்
இறைவன் ஏற்கும் பூக்கள்
இறவா அழகு கூட்டும்…
சிவதர்சனி இராகவன்
3/7/2025

Nada Mohan
Author: Nada Mohan