அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வர்ண வர்ணப்பூக்களே
ஜெயம்
மண்ணிலே மலரும் அழகுக்குவியல் பூக்களாய்
கண்களும் நாடியதை மொய்த்துவிடும் ஈக்களாய்
அலங்கரிக்கும் பூமியை எழில் வண்ணங்களைக்கொண்டு
மலர்களால் மகிழ்ச்சியும் மண்ணுலகிற்கு உண்டு
ஒவ்வொரு பூக்களுக்கும் வெவ்வேறு மணமுண்டு
ஒவ்வொன்றையும் முகர்ந்தாலே றெக்கைகட்டும் மனவண்டு
இயற்கையின் அதிசயமாக பூக்களின் வண்ணம்
நிஜத்தினில் அவனியில் அழகான சின்னம்
புத்துணர்ச்சி தந்துவிடும் புன்னகைக்கும் பூக்கள்
சித்தத்தை மயக்கவைத்து எழுதவைக்கும் பாக்கள்
கொஞ்சும் வண்ணங்களைக்கண்டு விழிகள் சொக்கிப்போவதுமுண்டு
தஞ்சமே பூவனமென இரசனை தீவனமாக்குவதுமுண்டு
சின்னசின்ன பூக்கள் சிருங்கரமாய் விரியும்
வண்ணவண்ண இதழ்களோ பொழிவினை சொரியும்
கண்களை ஈர்த்துவிடும் கவர்ச்சியின் தோற்றம்
மண்ணிலே மலர்களே அழகுக்கான தேற்றம்
புலரும் பொழுதிலும் கொத்தாக சிரிக்கும்
நிலவின் இரவிலும் கவர்ச்சியை தரிக்கும்
03/07/2025
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments