நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

வர்ண வர்ணப்பூக்களே

ஜெயம்

மண்ணிலே மலரும் அழகுக்குவியல் பூக்களாய்
கண்களும் நாடியதை மொய்த்துவிடும் ஈக்களாய்
அலங்கரிக்கும் பூமியை எழில் வண்ணங்களைக்கொண்டு
மலர்களால் மகிழ்ச்சியும் மண்ணுலகிற்கு உண்டு

ஒவ்வொரு பூக்களுக்கும் வெவ்வேறு மணமுண்டு
ஒவ்வொன்றையும் முகர்ந்தாலே றெக்கைகட்டும் மனவண்டு
இயற்கையின் அதிசயமாக பூக்களின் வண்ணம்
நிஜத்தினில் அவனியில் அழகான சின்னம்

புத்துணர்ச்சி தந்துவிடும் புன்னகைக்கும் பூக்கள்
சித்தத்தை மயக்கவைத்து எழுதவைக்கும் பாக்கள்
கொஞ்சும் வண்ணங்களைக்கண்டு விழிகள் சொக்கிப்போவதுமுண்டு
தஞ்சமே பூவனமென இரசனை தீவனமாக்குவதுமுண்டு

சின்னசின்ன பூக்கள் சிருங்கரமாய் விரியும்
வண்ணவண்ண இதழ்களோ பொழிவினை சொரியும்
கண்களை ஈர்த்துவிடும் கவர்ச்சியின் தோற்றம்
மண்ணிலே மலர்களே அழகுக்கான தேற்றம்

புலரும் பொழுதிலும் கொத்தாக சிரிக்கும்
நிலவின் இரவிலும் கவர்ச்சியை தரிக்கும்

03/07/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading