அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

வர்ண வர்ணம் பூக்கள்

நேவிஸ் பிலிப் கவி இல(465)

வான வில்லின் நிறமோ ஏழு வர்ணம்
மண்ணில் பூக்கும் மலர்களோ ஏராளமாய்8
பலவண்ணமாய் புரியாத புதிராய்
எம் சிந்தையை கவர்கின்றாய்

வெள்ளை நிற மல்லிகையும்
செம்பரத்தையின் சிவப்பும்
மஞ்சள் நிற செவ்வந்தியும்
வண்ணங்கள் பலவாய் றோசாவும்

வீசும் வாசம் காற்றோடு கலந்து
எம் உள்ளமெல்லம் கொள்ளை கொள்ள
உன் இதழ்களின் மென்மையால்
என் இதயத்தை வருடுகிறாய்

அரச்சனை மலர்களாய்
மலர்கொத்துகளாய் பூச்செண்டுகளய்
மண மாலைகளாய்
ஆலய மேடைகளில் அலங்காரமாய்

வண்டுகள் மொய்த்திடும் வண்ண மலர்களே
மொட்டாகி மலராகி உதிர்ந்தாலும்
மீண்டும் மீண்டுமாய்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading