” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வர்ண வர்ணம் பூக்கள்

நேவிஸ் பிலிப் கவி இல(465)

வான வில்லின் நிறமோ ஏழு வர்ணம்
மண்ணில் பூக்கும் மலர்களோ ஏராளமாய்8
பலவண்ணமாய் புரியாத புதிராய்
எம் சிந்தையை கவர்கின்றாய்

வெள்ளை நிற மல்லிகையும்
செம்பரத்தையின் சிவப்பும்
மஞ்சள் நிற செவ்வந்தியும்
வண்ணங்கள் பலவாய் றோசாவும்

வீசும் வாசம் காற்றோடு கலந்து
எம் உள்ளமெல்லம் கொள்ளை கொள்ள
உன் இதழ்களின் மென்மையால்
என் இதயத்தை வருடுகிறாய்

அரச்சனை மலர்களாய்
மலர்கொத்துகளாய் பூச்செண்டுகளய்
மண மாலைகளாய்
ஆலய மேடைகளில் அலங்காரமாய்

வண்டுகள் மொய்த்திடும் வண்ண மலர்களே
மொட்டாகி மலராகி உதிர்ந்தாலும்
மீண்டும் மீண்டுமாய்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan