இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வர்ண வர்ணம் பூக்கள்

நேவிஸ் பிலிப் கவி இல(465)

வான வில்லின் நிறமோ ஏழு வர்ணம்
மண்ணில் பூக்கும் மலர்களோ ஏராளமாய்8
பலவண்ணமாய் புரியாத புதிராய்
எம் சிந்தையை கவர்கின்றாய்

வெள்ளை நிற மல்லிகையும்
செம்பரத்தையின் சிவப்பும்
மஞ்சள் நிற செவ்வந்தியும்
வண்ணங்கள் பலவாய் றோசாவும்

வீசும் வாசம் காற்றோடு கலந்து
எம் உள்ளமெல்லம் கொள்ளை கொள்ள
உன் இதழ்களின் மென்மையால்
என் இதயத்தை வருடுகிறாய்

அரச்சனை மலர்களாய்
மலர்கொத்துகளாய் பூச்செண்டுகளய்
மண மாலைகளாய்
ஆலய மேடைகளில் அலங்காரமாய்

வண்டுகள் மொய்த்திடும் வண்ண மலர்களே
மொட்டாகி மலராகி உதிர்ந்தாலும்
மீண்டும் மீண்டுமாய்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading