தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வர்ண வர்ண பூக்களே!

நகுலா சிவநாதன்

வர்ண வர்ண பூக்களே!

புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய் விரியும் இதழ்களே!

வர்ண வர்ண நிறமுடனே
வாஞ்சை கொடுக்கும்;; மலர்களே!
எண்ணம் யாவும் நிறைத்திடுமே
எழில் அழகுப் பூக்களே!

கண்ணைக் கவரும் பூக்களே
களிப்புத் தரும் வர்ணமே
மண்ணில் விரியும் மாண்புடனே
மாற்றம் காணும் வாசப்பூக்கள்

இயற்கை தந்த வரமுடனே!
இனிதாய் மலரும் மலர்களே
இன்பம் நல்கும் மணமுடன்
இதயம் கவரும் நறும்பூக்கள்

நகுலா சிவநாதன் 1814

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading