அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

வர்ண வர்ண பூக்களே-2030 ஜெயா நடேசன்

இறைவன் தந்த கொடையே
இயற்கை தந்த எழிலே
எண்ணம் எல்லாம் மனம் மகிழ்வே
வர்ண வர்ண பூக்களாய் மலர்வே
றோசா பூக்களாய் பல வர்ணங்களிலே
வீடுகள் தெருவீதி எலாம் அழகே
கண் கவரும் அற்புதம் மயங்கினோமே
வண்டுகள் ரீங்கார ஓசை ஒலியிலே
தேனுண்டு மயக்க நிலையில் ஆட்டமே
கோவில்களில் பீடமெலாம் அலங்கரிப்பே
இன்ப துன்பமதில் பூ மாலையாக முதலிடமே
பெண்கள் காதலில் மயங்கும் பூக்களே
காதலர் தினத்தில் சிவப்பு றோசா வர்ணமே
உலர்ந்து வீழ்ந்த போதிலும் வியப்பின் அழகே

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading