“வேள்வி”

நேவிஸ் பிலிப்
கவி இல (456)
புரட்சி தீ 🔥 பொறியாகி
நாளைய தலை முறைக்கு
வரவேற்பு கவி பாட
விதை கோதி நிலம் தூவி
உரமேற நிதம் கூவி
வளர்த்த செடிகள்,
புது நாற்றாய் வளர்ந்து
வளைந்து நிலம் முட்ட
சிறுமையை பெருமையாக்கி
வளைந்ததை நேராக்கி
வரட்சியை வசந்தமாக்கிய
பசுமைப் புரட்சி
தள்ளி நில்லாது ,துள்ளி எழுந்து
தன்னம்பிக்கை கேடயமாய்
தளராது செய்த பணி,
அர்ப்பணிப்பில் நிறைந்த
தியாகத்தை போற்றுவோம்,
கலைகள் வளர ,ஒழுக்கம் சிறக்க
புதியதோர் சமுதாயம் படைக்கும்
இது ஒர் ஆலயம் ,எங்கள் பாமுகம்,
ஐநூறுகள் தொட்டு விட்ட
பொன் மாலைப் பொழுதினிலே
வெற்றிக் கனிகள் கிட்டட்டும்
காண்போர் கைகள் தட்டட்டும்
விழா களை கட்டட்டும்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading