“வேள்வி”

நேவிஸ் பிலிப்
கவி இல (456)
புரட்சி தீ 🔥 பொறியாகி
நாளைய தலை முறைக்கு
வரவேற்பு கவி பாட
விதை கோதி நிலம் தூவி
உரமேற நிதம் கூவி
வளர்த்த செடிகள்,
புது நாற்றாய் வளர்ந்து
வளைந்து நிலம் முட்ட
சிறுமையை பெருமையாக்கி
வளைந்ததை நேராக்கி
வரட்சியை வசந்தமாக்கிய
பசுமைப் புரட்சி
தள்ளி நில்லாது ,துள்ளி எழுந்து
தன்னம்பிக்கை கேடயமாய்
தளராது செய்த பணி,
அர்ப்பணிப்பில் நிறைந்த
தியாகத்தை போற்றுவோம்,
கலைகள் வளர ,ஒழுக்கம் சிறக்க
புதியதோர் சமுதாயம் படைக்கும்
இது ஒர் ஆலயம் ,எங்கள் பாமுகம்,
ஐநூறுகள் தொட்டு விட்ட
பொன் மாலைப் பொழுதினிலே
வெற்றிக் கனிகள் கிட்டட்டும்
காண்போர் கைகள் தட்டட்டும்
விழா களை கட்டட்டும்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading