Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-03.01.2022 திங்கள்
கவி இலக்கம்-1434
ஒளியேற்றி வணங்கிடுவோம்
———————————–
ஆண்டொன்றை தந்த இறைவனும்
அறைகூவல் விடுக்கிறார் அன்றாடம்
இயற்கையை தந்தேன் இயல்பாய் வாழுங்கள்
எல்லோரும் வையகத்தில் நலம் பெற்று வாழவே
புவி போற்ற வாழ்வதற்கு பல அற்புதங்கள் செய்தவர்
மாண்பற்ற செயல்களாலே மனம் நோகின்றார்
மனிதர்கள் விரும்பா வேதனை தலையாக உள்ளது
வாழ்வில் இருள் அகற்றி பேரொளி எங்கும் பரவ
உள்ளத்து இருள் அகன்று தொலைந்திட
சொந்தமெலாம் உறவு கொண்டாடி மகிழ்ந்திட
காலமெலாம் இறையருள் உதவிட
புனிதத்தை போற்றி புவிதனில் வாழ்ந்திட
ஒளியேற்றி வணங்கிடுவோம் இறைவனையே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading